ஸ்ரீ மதே ராமானுஜாய நம :
ராகம் - பீம்ப்லாஸ்
பல்லவி
ஸ்ரீரங்கனை பணிவாய் தினமே ( மனமே ) திருக்கல்யாண கோலத்திலே கோதையுடன் திகழும்
- ரங்கனை
அனுபல்லவி
கங்கையில் புனிதமாய காவிரிகள் நடுவே
பொங்கிடும் மங்களம் தரும் ரெங்கநாயகி மகிழும்
- ரங்கனை
சரணம்
சொல்லழகர் சொல்லின் செயலழகர்
நான் மறைகள் புகழ்ந்திடும் நடை அழகர்
கண்டெடுத்தான் கருங்குழல் கன்னி கோதையை
கனவில் வந்தே அவளை கவர்ந்திட்ட கண் அழகன் - ரங்கனை
சரணம் - 2
ஆழ்வார்கள் கொண்டாடும் அரங்க நகரவப்பன்
ஆண்டாளும் தேர்ந்தெடுத்த அழகு தெய்வம் அரங்கன்
ஆளவந்தார் எதிராஜர் தேசிகரும் மாமுனிகளும்
அனவரதம் அடி பணிந்தே அனுபவித்த அணி அரங்கன் - ரங்கனை
=================================
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
=================================
From the book on பூங்கோதை புகழ் மாலை
Composed by : P.SunadaraRjan.
No comments:
Post a Comment